இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று (21)காலை பத்து மணியளவில் நாடாளுமன்ற கட்டட தொகுதிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சபாநாயகர், படைகள சேவிதர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரால் வரவேற்கப்பட்டிருந்தார்.

