நாட்டில் நாளைய தினம் 1 மணிநேர மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.
இருப்பினும், நாட்டில் இன்று(11) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.
இன்று பௌர்ணமி தினம் என்பதால் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (14) நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
