மன்னாரில் 10.4 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற இருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
இதன் பெறுமதி 150 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று காலை தலைமன்னாரிலிருந்து வாங்கலை நோக்கி பிக்கப் ரக வாகனத்தில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மன்னார் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் உள்ள 54 ஆவது பிரிவு மற்றும் 11 ஆவது இலங்கை பீரங்கிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.