மட்டக்களப்பு - புனித மைக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கா.பொ.த.உயர்தரப்பிரிவில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடம்பெற்ற மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் த.துவாரகேஸ் மற்றும் பாடசாலையில் உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றனர்.

மட்டக்களப்பு நகர் மணிக்கூண்டு கோபுரத்திலிருந்து சாதனை மாணவன் துவாரகேஸ் மற்றும் சாதனை படைத்த மாணவர்கள் அவர்களை வழி நடாத்திய ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாடசாலைக்கு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

பாடசாலை அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் பாடசாலையினை சென்றடைந்ததும் அங்கு பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கா.பொ.த.உயர்தரப்பிரிவில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடம்பெற்ற மாணவன் த.துவாரகேஸ் இதன்போது பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் உயர்தர பிரிவு மாணவர்களை வழிநடாத்தி இந்த ஆண்டு மிகப்பெரும் சாதனையினை புனித மைக்கேல் கல்லூரி பெறுவதற்கு காரணமாக அமைந்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

புதியது பழையவை