ஒவ்வொரு 10 இலங்கையர்களில் மூன்று பேர் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள், மாற்றுத்திரனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 15 தொடர்க்கம் 17 வீதமானவர்கள் உரிய உயரம் அல்லது எடையினை கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.