விடுதலைக்கான உண்ணாவிரத போராட்டம் - ஐவரின் நிலைமை கவலைக்கிடம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் வைக்கப்பட்டுள்ள 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இவர்களில் 5 பேரின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் குறித்த இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை