இன்று அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு



துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று காலை இடம் பெற்றுள்ளதாகவும் அதில் ஒருவர் காயமடைந்துள்ளதகாவும் தெரிய வந்துள்ளது.

இச் சம்பவம் பேலியகொடை கலுபாலம பகுதியில் இன்று (17) காலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம்
உந்துருளியொன்றில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சிறையிலிருந்து திரும்பியவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை