பராமரிப்புக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம், தற்போது முழு கொள்ளளவுடன் தேசிய மின் கட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை முதல் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார சபையிடம் போதுமான நப்தா கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.