இன்று (15) மின்வெட்டு நடைமுறைப்படுத்தபடாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாளையதினம் (ஜனவரி-16) மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, நாளையதினம் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.