இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே. ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜே.ஸ்ரீரங்கா 27 வாக்குகளையும் ஜகத் ரோஹன 24 வாக்குகளையும் பெற்றனர்.
இதன்படி ஜே.ரங்கா அதிக வாக்குகளைப் பெற்று தலைவராக தெரிவாகியுள்ளார்.
இதேவேளை முன்னாள் தலைவர் யூ.எல். ஜஸ்வர் புதிய தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதி பெறவில்லை.