பெண்கள் தொடர்பில் பகீர்த்தகவல்!



ஐஸ் போதைப்பொருளை பாவிக்கக் கூடியவர்கள் மிகக் குறுகிய காலத்துக்குள் மரணித்துப் போகக்கூடிய ஒரு மோசமான நிலை காணப்படுகிறதாக மட்டக்களப்பு- வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க தெரிவித்தார்.

பெண்கள் போதைக்கு அடிமை
தற்போது அதிகளவிலான பெண்களும் ஐஸ் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களாக இருப்பதாக தெரிவித்த அவர், நாம் மிக விரைவாக இல்லாமலாக்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.

பெண்கள் அதிகம் வீட்டுக்குள் இருப்பதினால் அவர்கள் எங்கே சென்று பயன்படுத்துகிறார்கள் என்று தேடித்திரிய தேவையில்லை என்றும், வீட்டுக்குள் இருந்தே அவர்களை அவதானித்து பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை சிறார்களிடத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பதார்த்தங்களினால் செய்யப்படுகின்ற லொலிபொப், மாத்திரைகள் வடிவிலான போதைப் பொருட்களை இவர்கள் வழங்கி விடலாம்.


இதனால் பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்தில் அவதானமாக இருந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இவ்வாறான போதைப்பொருள் தடுப்பு வேலைகளை இப்போதே ஆரம்பித்து இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து உங்களது சமூகத்தை பாதுகாத்து, போதைப்பொருள் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தாங்கள் முழுமையான பங்களிப்பை வழங்குவோம் என்றும் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்
புதியது பழையவை