மட்டக்களப்பு பாவற்கொடிச்சேனையில் வலம்புரிச் சங்கு கைப்பற்றல்!!



மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினரால் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் 33 வயதுடைய நபரொருவர் வலம்புரிச் சங்கொன்றுடன் நேற்று முன்தினம் (14) இரவு 10.00 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாதாக வவுணதீவுப் பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப் குறித்த நபர் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் சங்கு என்பன வவுணதீவுப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்.
புதியது பழையவை