தென், சப்ரகமுவ, ஊவா, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (16) மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்கள். 75 மீற்றர் வரையில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது
இதுதவிர, கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடைக்கிடை மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கோரியுள்ளது.
