2023 பெப்ரவரி 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு



தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்படுகின்ற தாழமுக்கம் நேற்று இரவு வட அகலாங்கு 8.40 என் இற்கும் கிழக்கு நெடுங்கோடு 82.90 இ இற்கும் அருகில் திருகோணமலைக்கு கிழக்காக 180 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. 

அது மேற்கு - தென்மேற்குத் திசையில் நகர்ந்து இன்று 2023 பெப்ரவரி 01ஆம் திகதி காலை இலங்கையின் கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில்  சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
புதியது பழையவை