மட்டக்களப்பு கல்லடி வாவி பகுதியில் இளைஞனின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
தம்பிலிவில் திருக்கோயில் பகுதியை சேர்ந்த T.சுதர்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக குறித்த இளைஞனை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.