‘விடுதலைப்புலிகளின் தலைவரின் புதிய படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும்" - காசி ஆனந்தன்



தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என ஈழ கவிஞர் காசி ஆனந்தன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்றுமுன் தினம் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என மீண்டும் காசி ஆனந்தன் தகவல் வெளியிட்டுள்ளார்.

புதிய படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும்
இது தொடர்பில் காசி ஆனந்தன் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வி பின்வருமாறு,

பழ.நெடுமாறன் பொய் சொல்வார் என யாரும் கருதக்கூடாது. அவரது மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள். இறுதி கட்ட போரில் தப்பியவர்களும் உயிருடன் உள்ளனர். பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா உயிருடன் இருக்கிறார்கள். ஆனால் அவரின் இரண்டு மகன்கள் உயிருடன் இல்லை.

அவரின் புதிய படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும்.ஒவ்வொரு குழுவின் தலைவரும் தங்களை தலைவராகவும், பிரபாகரனாகவும் கருதுகின்றனர். அவரின் நினைவு நாளை இதுவரை யாரும் அனுசரித்தது இல்லை. அவரும் இறுதி கட்ட போரில் தப்பியவர்களும் உயிருடன் உள்ளனர்.


பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்தில் வைகோ போன்ற தமிழக தலைவர்கள் பெரிதாக முரண்படவில்லை.அவர் மறைந்து வாழ மாட்டார் என கூறுவது பொருத்தமான கருத்து அல்ல.ரஷ்ய போராளி லெனினும் மறைந்திருந்து போராடியவர் தான்.

அரசியல் இயக்கம் முன்னெடுக்கப்படும்
2009க்கு பின் வெளியேறிய போராளிகள் 30 குழுக்களாக இயங்குகின்றனர். உலக அளவில் பெரிய அரசியல் இயக்கத்தை பிரபாகரன் முன்னெடுப்பார் என கருதுகிறேன்.

கடந்த 45 ஆண்டுகளாக ஏதிலியாக என்னை தாங்குவதால் இந்திய அரசை நான் மதிக்கிறேன். ஈழ மக்களுக்கு இந்திய அரசால் மட்டுமே உதவ முடியும் என்பதால் நான் மதிக்கிறேன்.பிரபாகரன் இருந்த காலத்தில் சீனாவால் இலங்கையில் கால் பதிக்க அனுமதிக்கவில்லை.

பழ.நெடுமாறன் தூய்மையானவர் - நேர்மையான அவர் கூறும் கருத்து உண்மையானது. அவரின் குடும்பத்துடன் பழ.நெடுமாறன் நெருக்கமாக இருக்கின்றார்" "தமிழ் ஈழம் என்பது இந்தியாவின் தெற்கு எல்லை. அது பாதுகாப்பாக இருக்க வேண்டும். தமிழ் ஈழம் என்பது இந்தியாவின் தெற்கு எல்லை. அது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை