உயரம் பாய்தல் நிகழ்வில் இலங்கையில் சாதனை படைத்த எதிர்வீரசிங்கம் ஐயா,கிளிநொச்சிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி ஐக்கிய விளையாட்டு கழக அனுசரணையில் பல்வேறு விளையாட்டுக்களை ஊக்குவிப்பது இவரது வருகையின் முக்கிய நோக்கமாகும் என தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆசிய அளவில் சாதனை
குறிப்பாக எதிர்வரும் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மைதானத்தில் மாலை நேரங்களில் உயரம் பாய்தல்,நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளிற்கான ஆலோசனை எதிர்வீரசிங்கம் ஐயா வழங்குவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவினூடாக இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வீரசிங்கம் ஐயா 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.