அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதுண்டு விபத்து - ஒருவர் உயிரிழப்பு!





தம்புல கோமாகவ என்ற பகுதியில்(18) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதுண்டு ஏற்பட்ட இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.


அரச பேருந்தில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகின்றது.

புதியது பழையவை