புத்தாண்டில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்!



நீர்கொழும்பு - சீதுவ பிரதேசத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு (14-04-2023) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

சந்தேகநபருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு கொலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை