திருகோணமலையில் கடற்கரையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்!



திருகோணமலை அலஸ்தோட்டம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை வீட்டிலிருந்து சென்ற நிலையில் இன்றைய தினம் (15-04-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சாம்பல்தீவு-சல்லி வாட்டு இலக்கம் 02யைச் சேர்ந்த 38 வயதான ராஜலிங்கம் பிரபாகரன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அலஸ்தோட்டம் கடற்கரையில் மீக்கப்பட்ட சடலத்தை திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக பொது வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இதனையடுத்து சடலத்தை கொண்டு சென்று பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை