தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவு வணக்கம் செய்வதற்காக பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது!



தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவு வணக்கம் செய்வதற்காக முதன்முதலாக பொதுக்கட்டமைப்பு மட்டக்களப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2023, ஏப்ரல்,19,ல் அன்னைபூபதியின் 35, வது நினைவு வணக்க நிகழ்வை நடத்துவதற்கு வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த பொதுக்கட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள்..!

1. க.பிரபாகரன்-அன்னை பூபதியுன் புதல்வர்

2. திருமதி லோ.சாந்தி-அன்னைபூபதியின் புதல்வி

3. யோ.அரவிந்தன்-அன்னைபூபதியின் பேரன்

4. த.முரசொலிமாறன் குருக்கள்

5. வனபிதா ஜோசப்மேரி அடிகளார்

6. சபா. சிவயோகநாதன்-சிவில் சமூக செயல்பாட்டாளர்

7. இ.செல்வகுமார்-சிவில் சமூக செயல்பாட்டாளர்.

இவர்களின் ஏற்பாட்டில் இந்த வருடம் அன்னை பூபதியின் 35, வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெறவுள்ளது.

அன்று மு.ப.09, மணிக்கு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடு திதி ஆராதனைகளும் அதனை தொடர்ந்து அன்னதானமும் பின்னர் பி.ப 04, மணிக்கு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இருந்து நாவலடி அன்னைபூபதியின் கல்லறையில் சென்று பி.ப.05, மணிக்கு நினைவு வணக்கம் செலுத்தப்படும் என “தியாக தீபம் அன்னைபூபதி நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு”
பொது அறிவித்தலை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை