மோட்டார் சைக்கிளில் நாட்டு கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர் கைது!



அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள வேப்பயடி சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் நாட்டு கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய ,அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய, அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் ,கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரத்நாயக்க மேற்பார்வையில் ,பொலிஸ் பரிசோதகர் டயஸ் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 59 வயது மதிக்கத்தக்க மண்டூர் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் சந்தேக நபரிடம் இருந்து தொலைபேசி ஒன்றும், 1 கிலோ 50 கிராம் பொதி செய்யப்பட்ட நாட்டு கஞ்சா, ஒரு தொகை பணம் மற்றும்
மோட்டார் சைக்கிள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் ,சவளக்கடை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக
பாரப்படுத்தியுள்ளனர்.
புதியது பழையவை