நேற்று (16-05-2023)இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பதவியா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவர் இந்த துப்பாக்கிசூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் 38 வயதான ஒருவரே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.