கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!



இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவை இறக்குமதி செய்வதாயின் கட்டாயமாக அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் என நிதியமைச்சு வர்த்தமானி அறிவித்ததையடுத்து சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கோதுமை மா விநியோக நிறுவனங்களால் கோதுமை மாவின் விலை அவ்வப்போது அதிகரித்து வருவதால், புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் கோதுமை மாவை இறக்குமதி செய்தனர்.

எந்தவொரு நபரும் கோதுமை மா கிலோ ஒன்றுக்கு 40ரூபா வரி செலுத்தி இறக்குமதி செய்துகொள்ள முடியும் என்று விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையின் பிரகாரம் புறக்கோட்டை இறக்குமதியாளர்கள் தங்களுக்குத் தேவையான அளவில் கோதுமை இறக்குமதியை மேற்கொண்டிருந்தனர்.


நிதியமைச்சினால் விதிக்கப்பட்ட தடை
இருப்பினும் நிதியமைச்சின் வர்த்தமானி அறிவித்தல் காரணமாக அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அண்மைய நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை 160.00 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதோடு, மேற்படி வர்த்தமானி அறிவித்தலுடன், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 200.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.

பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை தானியங்களை இறக்குமதி செய்து கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் அவற்றை மாவாக்கி விநியோகிப்பதாகவும் ஒரு கிலோ கோதுமை விதைக்கு இறக்குமதி வரியாக 30 ருபாவாக இருந்தாலும் கோதுமை மா இறக்குமதியின் போது ஒரு கிலோவுக்கு 40 ருபா வரி அறவிடப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை