அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளை



நுவரெலியாவில் அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயமே இவ்வாறு சனிக்கிழமை (08) இரவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் பிரதான நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலய வெளிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட உண்டியலை ஆலயமுற்றத்திலேயே விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக வந்த அக்கோவில் பூசகர் பிரதான கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

வழங்கப்பட்ட முறைப்பாடு
இது தொடர்பில் ஆலய நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்துக்கு தெரிவித்துள்ளனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த நுவரெலியா பொலிஸார் மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விரல் அடையாளயங்களையும் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னரும் இந்த ஆலயத்தில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தாலி மணி, தங்க ஆபரணங்கள், ஆலய ஒலிபெறுக்கி உபகரணங்கள் மற்றும் ஆலய உண்டியலை காணிக்கை பணம் என்பன திருட்டு போயிருந்ததாக கூறபடுகின்றது.

தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இருப்பினும் அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

புதியது பழையவை