மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மீது பிள்ளையானின் அராஜகம்!



5ம் வகுப்பு கூட படிக்காத அரசியல்வாதி ஊடகத்தினை அடக்கும் அளவுக்கு கேவலமாக போய்விட்டது மட்டக்களப்பு ஊடகவியலாளர்களின் நிலை.

ஊடகவியலாளர்கள் என்ற உயரிமதிப்பை சீர்குலைத்த சிலரால் ஊடகத்தின் மதிப்பு இன்று (31-08-2023) இந்தளவு தூரம் மோசமாக போய்விட்டது.


தேர்தல் ஒன்று வரும் வரை ஊடகவியலாளர்கள் காத்திருங்கள்.. தக்க பாடத்தை புகட்டலாம்.. ஊழலை வெளிய கொண்டு வரலாம்.

மூடிய அறைக்குள் வாய்மூடிகளால் ஊடகத்தை மூடி அபிவிருத்தி பற்றி ஊமைப்பாசையில் நடாத்தப்படுகிறது.

மேலும் இவை தொடர்பில் குறிப்பிட வேண்டுமானால்....


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தான் அழைத்துவரும் அமைச்சர்களிடம் துணிகரமாக கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதிக்க கூடாது என்ற அடிப்படையில் இவ்வாறான ஆலோசனையை வழங்கி உள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

சம்பவங்கள் கொள்ளை சம்பவங்கள் மற்றும் காணி அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட அவிருத்தி குழு கூட்டத்தில் இடம்பெறும் அனைத்து வாதங்களையும், குற்றச்சாட்டுக்களையும் மக்களின் பார்வைக்கு கொண்டுசென்றதன் காரணமாக ஊடகவியலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு வெளிப்பாடுதான் அவரது இந்த நடவடிக்கை என்று கூறுகின்றார்கள் ஊடகவியலாளர்கள்.

மட்டக்களப்பை பொறுத்தவரையில் பல ஊடகவியலாளர்கள் உரிமைக்காக குரல் கொடுத்து உயிரை இழந்துள்ளனர்.

சுமார் 17 தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படட ஒரு இடமாக மட்டக்களப்பு உள்ளது.

ஊடகவியலாளர்களை அப்பட்டமாக கொலை செய்து கைகளில் இரத்தக்கறை நடமாடி திரிந்தவர்களின் அடக்குமுறைக்குள் ஊடகங்களை மறுபடியும் கொண்டுவர எத்தனிப்பது அங்குள்ள ஊடகவியலாளர்களை அச்சப்படுத்துகின்றது.


சமாதான காலம் என்று கூறப்படுகின்ற இந்தக் காலத்திலும் ஏதோ ஒரு தொணியில் ஊடகவியலாளரை அச்சுறுத்துவதும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே இருக்கின்றது.

இலங்கையில் பொதுவாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவது வழக்கம். மாவட்டத்தின் நலன் சார்ந்து, மாவட்டத்தின் எதிர்காலம், அபிவிருத்தி மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் விடயங்கள் சார்ந்தும் அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராயப்படும்.

ஊடகங்களின் பங்களிப்பு அரசாங்க அதிகாரிகளால் அரசியல்வாதிகளால் சொல்ல இயலாத, செய்ய இயலாத பல விடயங்கள் உள்ளன. அவற்றை ஊடகங்கள், மக்கள் மற்றும் மேல் அதிகாரிகள் உட்பட அரசாங்கத்திற்கு கொண்டு சேர்க்கின்ற ஒரு பொறிமுறை உள்ளது.

அதற்காக தான் அனைத்து ஊடகங்களும் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அழைக்கப்படுகின்றன.

ஆனால் குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் நலன் சார்ந்து அவர்களின் பெயர்களை பிரபல்யம்படுத்தக்கூடிய ஊடகங்களை மாத்திரம் வடிகட்டி அவை தவிர்ந்த ஏனைய ஊடகங்களுக்கு அபிவிருத்தி கூட்டத்தில் அனுமதி மறுப்பது ஊடக சுதந்திரத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் விடுக்ககூடிய ஓர் எச்சரிக்கையாகவும் சவாலாகவும் தான் ஊடகவியலாளர்களால் பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஒட்டுமொத்தமாக ஊடகங்களையும் தடை செய்வது எச்சரிக்கை விடுவது சவாலுக்கு உட்படுத்துவது மோசமான கலாசாரதிற்கு இட்டு செல்கின்ற செயற்பாடு என்ற அச்சம் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக காணப்படும் ஊடகம் ஏன் ஆளுங்கட்சிக்கு சார்பான சில அரசியல்வாதிகளால் அடக்கபடுகின்றது என்ற ஆதங்கத்தையும் ஊடகவியலாளர்கள் எழுப்புகின்றார்கள்.

எது எவ்வாறாக இருந்தாலும் மக்கள் நலன் கருதி உரிமை சார்ந்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது ஊடகங்களிலும் ஊடகவியலாளர்களின் கடமை.

இதுபோன்ற அச்சுறுத்தலுக்கு மட்டக்களப்பு உரிமை சார்ந்த ஊடகவியலாளர்கள் ஒருபோதும் அடிபணியமாட்டார்கள் என்பது தின்னம் என ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
புதியது பழையவை