மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலத்தடியில் இன்று(08-09-2023)இடம்பெற்ற விபத்தில் 12 வயதுச்சிறுமி உயிரிழந்துள்ளதுடன், விபத்தில் கையுடைந்து காயமடைந்த நிலையில் தந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காவத்தமுனை பனிச்சையடி வீதியைச்சேர்ந்த கலீல் என்பவரும் அவரது மகளும் காவத்தமுனையிலிருந்து மாவடிவேம்பு செல்லும் வழியிலேயே இவ்விப்பத்து இடம்பெற்றுள்ளது.