திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பாலநகர் பகுதியில் வெடிக்காத நிலையில் செல் ரக குண்டு ஒன்று காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (07-09-2023) விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காணி உரிமையாளர் துப்பரவு பணியை மேற்கொண்டிருந்த போது வெடிபொருள் இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்தே இவ் செல் குண்டானது மீட்கப்பட்டுள்ளது.
குறித்த செல் ரக குண்டானது யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காது நிலத்தில் புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.