கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் கைது!



வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்ட விரோதமான முறையில் கடத்த முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (15 -09-2023) இரவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

17 இலட்சம் ரூபா பெறுமதி
டுபாயிலிருந்து வந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதான குறித்த பெண் அடிக்கடி விமானம் மூலம் பொருட்களை கொண்டுவந்து இலங்கையில் விற்பனை செய்து வருபவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை