யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட திலீபனின் நினைவேந்தல்



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று (16 09-2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் முன்னிலை வகிக்க, கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமாரின் வழிகாட்டலில் இன்றைய தின நினைவேந்தல்கள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜெ.அருண் மற்றும் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சி.அபிரக்சன் ஆகியோரது பங்குபற்றுதல்களுடன் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் , ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை