மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நவநீதன் சசிகலா அவர்கள் இன்று (15-10-2023) காலை தனது வளவில் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் ஆய்வதற்கு எத்தணித்தபோது முருங்கைக்காய் ஆய்வதற்கு பயன்படுத்திய கொக்கு துரட்டி மின்கம்பியில் விழுந்ததால் பரிதாபகரமாக உயிரிழந்தார்.


இவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோத்தராக கடமை ஆற்றும் நபர் ஆவார் இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

மகள் தாயை காப்பாத்த முற்பட்டபோது மகள் மின்சாரம் தாக்கி களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.


இவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தனது தாய் மரணம் அடைந்த காரணத்தினால் 82 வயதான தனது தந்தை முழுமையாக செயல்பட முடியாத காரணத்தினால் இவரின் கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


இவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணையினை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொன்டுவருகின்றனர்.
புதியது பழையவை