பாடசாலை சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் வைத்தியசாலையில்



கொழும்பு - மஹரகம - நாவின்ன விஜேராம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில், மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவின்ன விஜேராம பகுதியில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலையின் கட்டிடம் ஒன்றின் சுவரே நேற்றைய தினம் (16-10-2023) இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவர் கொழும்பு தெற்கு போதனா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை