அம்பாறை சம்மாந்துறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு



அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன்வெளிக் கண்டம் ஓட்டையன் மடு வயல் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 40 வயதுடைய, காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகவும், தபால் வீதி குறுமன்வெளி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும்
கொண்ட செல்வநாயகம் சதீஸ்கரன் என அடையாளங் காணப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், கடந்த மூன்று நாட்களாக வீடு திரும்பவில்லை என பொலிஸாரின் விசாரணையில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை