வைத்தியசாலையில் ஆடை மாற்றிய தாதி - கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தவர் கைது!



காலி - உடுகம பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்றின் குளியலறையில் ஆடை மாற்றிக்கொண்டிருக்கும் தாதியை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணியாளர் ஒருவரே இவ்வாறு உடுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டடவர் வைத்தியசாலையில் பணிபுரியும் பணியாளரான காலி - வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவராவார்.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோக குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் உடுகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை