பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது



அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெண்னொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று பெண்னொருவர் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்வதற்கு வருகைதந்துள்ளார்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்த பெண்ணிடம் பாலியம் இலஞ்சம் கோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து இது தொடர்பில் குறித்த பெண்ணால் இலஞ்ச ஒழிப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் கல்முனை நகரில் மாறுவேடத்தில் வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கல்முனையில் உள்ள உல்லாசவிடுதி ஒன்றுக்கு வருமாறு கூறி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கு சென்று விடுதி அறைக்குள் சென்றபோது குறித்த பெண் மலசல கூடத்திற்குள் இருந்து இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அங்கு வந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைதுசெய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணையின் பின்னர் அம்பாறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 28 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
புதியது பழையவை