மட்டக்களப்பில் நத்தார் திருநாளை முன்னிட்டு - 47 கைதிகள் விடுவிப்பு!



நத்தார் திருநாளை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் , மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 2 பெண் கைதிகள் உட்பட 45 கைதிகள் இன்று(25-12-2023) காலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று திங்கட்கிழமை (25) விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர். 

மேலும் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நன்றி செலுத்தி வீடுகளுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை