புகையிரதத்தில் மோதி யுவதி ஒருவர் உயிரிழப்பு!


கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இரவு அஞ்சல் புகையிரதத்தில் புகையிரத பாதையின் எல்ல 9 வளைவு பாலத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலில் மோதிஇன்று (25-12-2023) உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கம் 109, முள்ளரராவ, கிடலெல்ல எல்ல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 08.25 அளவில் எல்ல 9 வளைவு பாலத்தை கடந்து பதுளை நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்தில் குறித்த யுவதி ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விடியல் செய்திகள்

உயிரிழந்த யுவதியின் சடலம் தெமோதர புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விடியல் செய்திகள்

மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை