பறந்து கொண்டிருந்த விமானத்தில் இலங்கைச் சிறுமி துஷ்பிரயோகம்




பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (13-12-2023) சவுதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே இடம்பெற்றுள்ளது.

கைதான இந்திய பிரஜை
சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 49 வயதுடைய இந்திய பிரஜை என்றும் பாதிக்கப்பட்ட இலங்கை சிறுமிக்கு 8 வயது எனவும் கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் விமான பணியாளர்களிடம் விடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைதான சந்தேகநபர் குறித்த விமானத்திலிருந்து கட்டுநாயக்கவை வந்தடைந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


சிறுமி பரிசோதனைக்காக விமான நிலைய பொலிஸாரால் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், கைதான இந்திய பிரஜை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை