போரதீவுப்பற்று பழுகாமத்தில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு!




மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பழுகாமம் மற்றும் பட்டாபுர மக்களுக்கு BUDS அமைப்பின் அனுசரனையோடு பழுகாமம் POSAD அமைப்பினால் நேற்று (17-01-2024) ஆம் திகதி பழுகாமம் கலாச்சார மண்டபத்தில் நிவாரணப் பணிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களும்,  மட்டக்களப்பு BUDS அமைப்பினரும், பழுகாமம் POSAD அமைப்பினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

BUDS அமைப்பின் பிரித்தானியா கிளை தலைவர் அழகரெத்தினம் கங்காதரன் அவர்களிடம் பழுகாமம் POSAD அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக இந்நிவாரணப் பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


புதியது பழையவை