கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!




பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் ஏனைய கொடுப்பணவு முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தை வலியுறுத்தும் முகமாக,
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்துள்ளதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.


அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக,
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலைய முன்னறலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

2016ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்ப பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தருவதாக அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை வழங்குதல்,
மாதாந்த இடர் கொடுப்பணவை அதிகரித்தல், 2024 பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டு ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
கொடுப்பணவை பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் வழங்க கோரல், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய அதிகரிப்புச் செய்ய வலியுறுத்தல்,
பல்கலைக்கழகங்களில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பி நிர்வாக விடயங்களை சுமூகமாக முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளல், திறந்த விளம்பரத்தின் மூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கையினை உடனடியாக செயற்படுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம் என்பன இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் நடைபெற்றது.

பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு, சுமார் ஒரு மணிநேரம் போராட்டம் இடம்பெற்றது.
புதியது பழையவை