பிரித்தானிய இளவரசி - இலங்கையை வந்தடைந்தார்





பிரித்தானிய இளவரசி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு (Anne) இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) நேற்று புதன்கிழமை (10-01-2024) நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.



அங்கு அவர்களுக்கு பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இளவரசி ஆன் விருந்தினர் அபிப்பிராயப் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.



அதேவேளை நாட்டுக்கு வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை