09 ஆவது நாடாளுமன்றின் 5வது அமர்வு நாளை!




ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கும்போது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற திறப்பு விழாவை மிகக் குறைந்த செலவில் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்வில் மரியாதை அணிவகுப்பு, மரியாதைக் காட்சிகள், ஊர்வலங்கள் போன்ற எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்தருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை