உத்தியோகபூர்வ சீருடையை புறக்கணித்த இலங்கை தாதியர்கள்




அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர்கள் சாதாரண ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கத் தீர்மானித்துள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தீர்மானத்தை இன்று (06-02-2024) முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் சங்கம் கூறியுள்ளது.

நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, அவர்கள் தமது உத்தியோகபூர்வ சீருடையை அணிய மறுத்துள்ளார்களென செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை