10 வது தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில்






மாற்றத்திற்கான தலைமைத்துவம் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் 10 வது சாரணர் ஜம்போரி திருகோணமலையில் இன்று (20-02-2024)தொடக்கம் 26-02-2024 ம் திகதி நடைபெறவுள்ளது.

ஜம்போரியில் பங்குபற்றும் தேசிய சர்வதேச சாரணர் தலைவர்கள் இன்று தொடக்கம் திருகோணமலைக்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.

11,500 க்கு மேற்பட்ட சாரண ஆண், பெண் சாரணர்  தலைவர்கள் இதில் பங்குபற்றுகின்றனர்.




திருகோணமலை சிறீ கோணேஸ்வரா கல்லூரி மைதானத்தை மையமாக கொண்டு நடைபெறும் இந்த ஜம்போரிக்கு அதன்  அருகே காணப்படும் மைதானங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

பங்குபற்றுனர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளும் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 21 ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜம்போரியின் அங்குரார்ப்பண வைபவம் நடைபெறவுள்ளது.

21 ம் திகதி தொடக்கம் காலை முதல் இரவு 9 மணிவரை ஜம்போரியை பொது மக்கள் பார்வையிட முடியும்.

ஜம்போரி நடைபெறுவதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமைலையின் சுற்றுலா அபிவிருத்திக்கு இந்த ஜம்போரி வலுசேர்க்க கூடியதாக அமையும்.

மைதானத்தில் கூடாரங்களை அமைத்து சாரணர் தலைவர்கள்  பல்வேறு பிரயோக செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் தலைமைத்துவம் , புத்தாக்கம் உட்பட பல துறைகளில் தம் திறமைகளை வெளிக்கொணர சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை, திருகோணமலை மாவட்ட செயலகம் உட்பட பல அரச தனியார் துறை நிறுவனங்கள் இதனை சிறப்பாக நடாத்த பங்களிப்புக்களை வழங்கி வருகின்றன.
புதியது பழையவை