சுதந்திர தினமான இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 23 கைதிகள் விடுதலை




சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொதுமன்னிப்பின் கீழ், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த
23 கைதிகள் மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் குற்ற செயல்களுக்காக, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறைச்சாலையில் வைக்கப்பட்ட 23 கைதிகள்
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் முன்னிலையில், விடுவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை பதில் பிரதான ஜெயிலர் ஹென்றி உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை