இந்தியாவில் காஷ்மீரில் இரண்டு பகுதிகளில் நில அதிர்வுகள்



இந்தியாவில் காஷ்மீரில் இரண்டு பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதில் கார்கில் பகுதியில் 3.8 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இது 10 கிலோ மீற்றர், ஆழகத்தில் நிலநடுக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியிலும் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

எந்த பாதிப்புக்களும் இல்லை
இதுவும் 12 கிலோ மீற்றர், ஆழத்தில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த நில அதிர்வுகளினால் இதுவரை எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை