இராகமை ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தின் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (18-02-2024)காலை பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில் தடம்புரண்டதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.