மட்டக்களப்பு மாநகரம் - சிங்கள மயமாக காட்சி



இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் நாளை (04.02.2024 )திகதி மாலை 4.00 மணிக்கு இந்நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

இலங்கையின் சுதந்திர தினம்


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமாகிய எந்திரி என்.சிவலிங்கத்தின் வழி நடாத்தலில் மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடிப் பாலம் உள்ளிட்ட கல்லடி வரையிலான பிரதான வீதி உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு மின் குமிழ்களிலான அலங்கார வேலைகளும் இடம்பெற்று வருகின்றது.


புதியது பழையவை