கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்-சுதந்திரதின நிகழ்வு!




இலங்கையின் 76வது தேசிய சுதந்திரதின நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில்
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் வாழும் நான்கு தேசிய இனத்தவரின் வரவேற்பு, பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, பேண்ட் வாத்தியங்கள், கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் இந்த சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக இந்தியா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் அப்துல்லா, பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், முப்படையினர், பிரதம செயலாளர், அரசாங்க அதிபர்கள், அமைச்சின் செயலாளர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


புதியது பழையவை