பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாவனல்லை அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தந்தை முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் பெண் வைத்தியரின் தந்தை கேகாலை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்தே இவர் இன்று புதன்கிழமை (08-02-2024) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியரிடமும் சம்பவம் இடம்பெற்றபோது கடமையிலிருந்த ஐவரிடமும் வாக்குமூலங்களைப் பெறப்பட்டபோது ஒரு வைத்தியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.